10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி இயல் 1,2,3

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

மனப்பாடப் பகுதி
இயல் 1
அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
                                                                    -பாவலரேறு பெருஞ்சித்திரனார்


********************************
இயல் 2
முல்லைப்பாட்டு 

நல்லோர் விரிச்சி கேட்டல் 

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்
                                                                   - நப்பூதனார்.

********************************
இயல் 3
காசிக்காண்டம் 


விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
             வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
              எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன்தன் அருகுற இருத்தல்
              போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
              ஒழுக்கமும் வழிபடும் பண்பே
                                                                  -அதிவீரராம பாண்டியர்

********************************
திருக்குறள்

 மெய் உணர்தல் 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பெரியாரைத் துணைக்கோடல் 
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

கண்ணோட்டம் 
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

ஆள்வினை உடைமை 
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
                                                - திருவள்ளுவர்

********************************
KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.