7th Tamil January 2nd Week Notes Of Lesson

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

7th Tamil January 2nd Week Notes Of Lesson

7th Standard Tamil January Month 2nd week notes of lesson 2023.


7th Tamil January 2nd Week Notes Of Lesson

  • நாள்               :           09-01-2023 முதல் 13-01-2023     
  • மாதம்                :           ஜனவரி
  • வாரம்               :              இரண்டாம்   வாரம்                     
  • வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    
  • பாடம்               :           தமிழ்  
  • தலைப்பு          :             1. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, 2. திருநெல்வேலிச்சீமையும் கவிகளும்

அறிமுகம்                                 :

  • ஒவ்வொருப் பொருளுக்கும் புகழ்ப்பெற்ற ஊரின் பெயர்களைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.
  • முன்னர் கற்ற பாடத்திலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

  • கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

  • திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும், சிறப்பையும் அறிதல்
  • கருத்துகளைத் தொகுத்து கடிதம் எழுதும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

  • பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்
  • திருநெல்வேலி மாவட்டத்தின் பெயர்க் காரணம் கூறல்
  • திருநெல்வேலியில் உள்ள சிறப்புகளைக் கூறல்
  • திருநெல்வேலியை இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்
  • திருநெல்வேலியைப் பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்
  • திருநெல்வேலி கவிகளைப் பற்றிக் கூறல்
  • நகரத்தின் சிறப்பை உணர்ந்து போற்றுதல்

நினைவு வரைபடம்                   :

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி


திருநெல்வேலி சீமையும் கவிகளும்



 விளக்கம்  :

( தொகுத்தல் )

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

  • வேணுவனம் என்பது திருநெல்வேலியின் முந்தையப் பெயர். வேணுவனம் என்பது மூங்கில் காடு
  • திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம் மலைகள் நிறைந்தப் பகுதி
  • திருநெல்வேலியை வளம் செழிக்க வைக்கும் ஆறு தாமிரபரணி
  • பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது உழவுத்தொழில்
  • நகரின் நடுவே நெல்லையப்பர் கோவில் உள்ளது.
  • அகத்தியர் போன்றோரை தந்து தமிழுக்கு பெருமைச் சேர்த்துள்ளது திருநெல்வேலி
  • அயல்நாட்டு அறிஞர்கள் ஜி.யு,போப்,கால்டுவெல் போன்றோரையும் ஈர்த்துள்ளது
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
  • பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டையபுரம்
  • தேசிக விநாயகனார் தமிழை ஆழமாகவும் அழுத்தமாகவும் கற்ற இடம் திருநெல்வேலி
  • தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடம் சீவலப்பேரி என்னும் முக்கூடல்
  • பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதியை தரிசித்தார்.
  • காவடிச்சிந்துவைப் பாடியவர் அண்ணாமலையார்.
  • நுண்துளி தூங்கும் குற்றாலம் – என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
  • குற்றாலகுறவஞ்சியை திரிகூடராசப்பக்கவிராயர் பாடியுள்ளார்

காணொளிகள்                         :

  • விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
  • கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

  • உரைப்பத்தியினை வாசித்தல்
  • திருநெல்வேலி பெயர்க்காரணம் அறிதல்
  • திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்
  • திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும் இயற்கை வளங்களை அறிதல்
  • உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள் அறிதல்
  • திருநெல்வேலியில் வாழ்ந்த கவிகள் பற்றி அறிதல்
  • திருநெல்வேலிக்கு சென்று வந்த புலவர்கள் பற்றி அறிதல்
  • திருநெல்வேலி சிறப்புகளைப் பாடும் இலக்கியங்களை அறிதல்

மதிப்பீடு                                   :

LOT :

  • திருநெல்வேலி ______ மன்னர்களோடு தொடர்புடையது
  • குற்றால குறவஞ்சியைப் பாடியவர் ________
MOT
  • திருநெல்வேலி முந்தைய பெயர் யாது? அதன் பொருள் என்ன?
  • முக்கூடல் பற்றிக் கூறுக
HOT:

  • மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும்?
  • உங்களுக்குப் பிடித்த ஒன்றை கவிதையாக கூறுக.

கற்றல் விளைவுகள்  :

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

  • T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள்
  • எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
திருநெல்வேலி சீமையும் கவிகளும்

  • T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

தொடர் பணி                            :

  • பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்.
  • உங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பெயர்களை எழுதி வருக.
  • உங்கள் ஊரின் சிறப்பை ஒரு பக்க அளவில் எழுதி வருக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.