Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Unit 4.2 Book Back Answer இயல் 4.2 நாட்டுப்புறக்கைவினைக் கலைகள்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download
– Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State
Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan &
Study Tips.
![]() |
8th Tamil Book Back Answer Unit 4.2 |
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………………
- இ) பனையோலைகள்
2. பானை ………………….. ஒரு சிறந்த கலையாகும்.
- ஆ) வனைதல்
3. ‘மட்டுமல்ல’ எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
- ஈ) மட்டும்+அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
- அ) கயிற்றுக்கட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
- 1. முழுவதும் – பாடநூல் முழுவதும் வாசித்தால்தான் தெளிவு கிடைக்கும்.
- 2. மட்டுமல்லாமல் – ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்.
- 3. அழகுக்காக – பல அரங்குகளில் சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள்.
- 4. முன்பெல்லாம் – முன்பெல்லாம் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்தினார்கள்.
குறுவினா
1. எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் என்று கூறுகிறோம்?
- மண் பொம்மை,மரப் பொம்மை ஆகியவை செய்தல், மூங்கில், பிரம்பு,மணல் ஆகியவற்றின் மூலம் பொருள் செய்தல்.
2. மண்பாண்டம்,சுடுமண் சிற்பம் ஒப்பிடுக.
- களிமண்ணை ஊறவைத்து சக்கரத்தில் வைத்து பொருள் செய்வது.
- மண்பாண்டம் களிமண்ணால் செய்த பொருள்களைச் சுட்டெரித்து செய்யப்படுபவை சுடுமண் சிற்பங்கள்.
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை?
- கிளுகிளுப்பை, பொம்மை, தொப்பி, கயிறு, கட்டில்.
சிறுவினா
1.தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகளை
எழுதுக.
-
சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
-
ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
-
கண்டியூரில் மண்கலன்கள் கிடைத்துள்ளன.
-
கீழடியில் சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.
2.மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
- தட்டு, கூடை, முறம், ஏணி,துடைப்பம் கட்டில்,
நெடுவினா
1. தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
- சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
- ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
- கண்டியூரில் மண்கலன்கள் கிடைத்துள்ளன.
- கீழடியில் சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.
- பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள்: கிளுகிளுப்பை,பொம்மை,தொப்பி, கயிறு, கட்டில்.
- மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் :
- தட்டு. கூடை முறம், ஏணி துடைப்பம் கட்டில்.
- பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறை:
- நெருப்பில் காட்டி, சூடுபடுத்தி கம்பி போல வளைத்து பிறகு தேவையான பொருள் செய்யலாம்.
சிந்தனை வினா
1. கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு
குறித்து எழுதுக.
- கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருளால் தயாரிக்கப் படுபவை.
- செயற்கையான பொருளோ தீங்கு விளைவிக்கும் இரசாயனமோ இதில் பயன்படுத்தப்படுவது இல்லை.
- இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றை முதன்மைப் பொருளாகக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
- கைவினைக் கலைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களின் மீதத்தைப் பூமியில் புதைத்தாலும், அவை மக்கி விடும். இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.