Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Book Back Answer Unit 4.3 இயல் 4.3 தமிழர் இசைக்கருவிகள்
இயல் 4.3 தமிழர் இசைக்கருவிகள்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download
– Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State
Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan &
Study Tips.
2. இக்கால இசைக்கருவிகள் குறித்து கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
வயலின் :
- வில் போட்டு வாசிக்கப்படும் மரத்திலான தந்திக் கருவி ஆகும். இது பழங்காலத்தில் பிடில் எனப்பட்டது. இதுமேலைத் தேயம், கீழைத் தேயம் என இருவகைப் பிராந்திய இசைகளால் இசைக்கப்படும் கருவி. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது.
தம்புரா :
- கம்பி கட்டப்பட்ட இசைக்கருவி தம்புரா. இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் இசைக்கப்படுகின்றது.
நாதசுவரம் :
- நாகஸ்வரம், நாகசு, நாயனம் ஆகிய வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெருமளவு இசைக்கப்படும் வாத்தியம் இவை. வட்ட வடிவமாக விரிந்து காணப்படும் உள் நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடல் மேல் பகுதியில் செப்புத் தகடு பொருத்தப்பட்டு இருக்கும்.
தவில் :
- நாதஸ்வரத்திற்குத் துணையாக இசைக்கப்படும் கருவி ஆகும். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்பட்டு இருக்கும்.
மதீப்பீடு
1. காற்றுக் கருவிகள் குறித்து செய்திகளை தொகுத்து எழுதுக.
முன்னுரை:
- காற்றுக் கருவிகள் குறித்து செய்திகளை தொகுத்துக் காண்போம்.
காற்றுக் கருவிகள்:
- .காற்றைப் பயன்படுத்தி செய்யும் செய்யும் கருவிகள் காற்றுக் கருவிகள் ஆகும்.
- புல்லாங்குழல் கருவிகள்.புல்லாங்குழல் மூங்கில் சந்தனம் ஆகிய மரத்தால் செய்யப்படுகிறது.கொம்பு இறந்த மாடுகளின் கொம்பை பயன்படுத்தி செய்யப்படுகிறது. திருவிழாவில் கொம்பை ஊதுவார்கள்.
- கடலில் இருந்து கிடைப்பது சங்கு அதையும் இசைக்க பயன்படுத்துவார்கள்
முடிவுரை:
- காற்றுக் கருவிகள் குறித்து அறிந்தோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.