8th Tamil Unit 4 Book Back Answer இயல் 4 திருக்கேதாரம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Unit 4.1 Book Back Answer இயல் 4.1 திருக்கேதாரம்

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.


8th STD Tamil Unit 4 - இயல் 4.1 திருக்கேதாரம்

கற்பவை கற்றபின்


1. தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.

திருஞானசம்பந்தர் :
  • இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
  • ஊர் – சீர்காழி
  • தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.
  • சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.

திருநாவுக்கரசர் :
  • இயற்பெயர் – மருள்நீக்கியார்
  • சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
  • பெற்றோர் – புகழனார், மாதினியார்.
  • தமக்கை – திலகவதியார்
  • பிறந்த ஊர் – திருவாமூர்
  • இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சுந்தரர் :
  • பிறந்த ஊர் – திருநாவலூர்
  • பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
  • இயற்பெயர் – நம்பியாரூரர்
  • சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.
  • இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.

 மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காட்டிலிருந்து வந்த ____________ கரும்பைத் தின்றன.

  • இ) வேழங்கள்

2. 'கனகச்சுனை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  • இ கனகம் + சுனை

3.முழவு + அதிர என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________.

  • இ முழவதிர
 

குறுவினா

1.தமிழர் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்  கருவிகளாக சுந்தரர் கூறுவன யாவை?
  • புல்லாங்குழல் மற்றும் முழவு
 

சிறுவினா


1. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு பரணி வருணனை செய்கிறார்?

  • தமிழ்ப் பாடலுக்குப் புல்லாங்குழலும் முழவும் ஒலிக்கும்.
  • நீர்நிலைகள் நீர் திவலைகளை வாரி இறைக்கும் யானை மணிகளை வாரி வீசும்.
 

சிந்தனை வினா

1. விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

  • திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின்போது இசைக்கருவிகள் இசைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
  • இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.