Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 3 Book Back Answer - இயல் 3.4 ஆன்ற குடிப்பிறத்தல்
8th Standard Tamil இயல் 3.4 ஆன்ற குடிப்பிறத்தல் Answers Guide
![]() |
8th Tamil இயல் 3.4 ஆன்ற குடிப்பிறத்தல் |
I. கற்பவை கற்றபின்
1. திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வகுப்பில் பகிர்க.
ஒருநாள் முயலும் ஆமையும் போட்டி ஒன்றை வைத்துக் கொண்டது. தொலைவில் தெரிந்த மலையுச்சியை யார் முதலில் அடைகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் என்பது அப்போட்டியின் விதி. ஆமை மெதுவாகத்தான் செல்லும்; முயல் வேகமாகச் செல்லும். அதனால் முயல் ஆமையின் மீது அலட்சியம் கொண்டது.
முயல் ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டது. ஆனால், ஆமை மெதுவாக நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருந்தது. ஆமையிடம் முயற்சி இருந்ததால், அது மலையுச்சியைப் போய் சேர்ந்தது.
முயல் முயற்சி செய்யாததால் கண்விழித்து பார்த்தது, தான் முயற்சி செய்யாததால் தோற்றுப் போனதை எண்ணி மிகவும் வருந்தியது. இதைத்தான் திருவள்ளுவர்,
‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’ என்கின்றார்.
மதீப்பீடு
1.திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கிக்காண்போம்.
சகாதேவன் கதை:
- துவைத்துப் போட்ட தலைமை ஆசிரியரின் வேட்டி காணாமல் போய்விட்டது.
- சிகாமணி திருடியதாக ஊரார் கூறினர்.
- ஆசிரியர் நடத்திய திருக்குறள் பாடத்தைத் கேட்டு சகாதேவன் தன் தந்தை திருடிய வேட்டியை கொடுத்து அனுப்புகிறான்.
- ஊரார் சிகாமணியை தண்டிக்க சொல்கிறார்கள்.
- சகாதேவனுக்காக ஆசிரியர் மன்னிக்கிறார்.
முடிவுரை:
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையை அறிந்தோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.