Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
NEET Exam: தலைவிரி கோலத்துடன் சென்ற மாணவிகள்... நீட் நுழைவுத் தேர்வுக்கு கடுமையான சோதனை.
NEET Exam: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்குப் பின்னர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் 14 மையங்களில் 6,630 மாணவர்கள் எழுதுகின்றனர்.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும் நிலையில், காலை 11 மணி முதல் 1 மணி வரை மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் நாமக்கல் தெற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் தலை முடியை ஒன்றோடு ஒன்றாகப் பின்னி இருக்கக் கூடாது என அதிகாரிகள் கூறியதையடுத்து தலைமுடியை விரிந்த நிலையில் தேர்வு மையத்திற்குச் சென்றனர்.
அதேபோல் தோடு, மூக்குத்தி, செயின் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து இருக்கக் கூடாது அதிகாரிகள் கூறியதால், தங்க ஆபரணங்களைக் கழட்டி தங்களது பெற்றோர்களிடம் கொடுத்த பின்பு தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு நடைபெறும் மையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.