Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil - இயல் 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Book Back Answer - New Syllabus
8th Standard Tamil Unit 1 book back question and answer new syllabus download pdf 2025 - 2026. Class 8 Lesson 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி book back answers guide.
Tamil Nadu Stard Board 8th Standard Tamil - Unit 1.3: Book Back Answers and Solutions. Eight std book back answers and solutions for Unit 1.3 – from the Tamil Nadu State Board 8th Standard Tamil textbook.
Unit 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி - மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற -------காரணமாக அமைந்தது.
இ அச்சுக்கலை
2.வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழையதமிழ் எழுத்து _________ என அழைக்கப்படுகிறது.
ஆ) வட்டெழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்
ஆ) தந்தை பெரியார்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ………………………. என அழைக்கப்பட்டன. ( கண்ணெழுத்துகள் )
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ……………………… ( வீரமாமுனிவர் )
குறுவினா
1.ஓவிய எழுத்து என்றால் என்ன?
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஓவிய வடிவமாக இருந்தது இதனை ஓவிய எழுத்து என்பர்.
2.ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்பது ஒலி எழுத்து நிலை ஆகும்.
3.ஓலைச்சுவடிகளில் நேர் கோடுகள் புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
- ஓலைச்சுவடிகளில் புள்ளியிட்டும் நேர்கோடுகள் இட்டும் எழுதினால் அவை கிழிந்து விடும் அதனால் அவை பயன்படுத்தப்படவில்லை.
4.வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
- எ,ஏ – ஒ, ஓ
சிறுவினா
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
- எழுத்துக்களில் புள்ளிகள் தெளிவாக தெரியாததால், மெய்யா, உயிர் மெய்யா? குறிலா? நெடிலா? என உணர வேண்டியிருந்தது. இது படிப்பவர்களுக்குப் பெரிதும் சிரமத்தைக் கொடுத்தது. எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2. தமிழ் எழுத்துக்களில் ஏற்பட்டஉருவ மாற்றங்களை எழுதுக.
- நெடில் எழுத்துக்களில் புள்ளிக்குப் பதிலாக துணைக்கால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எழுத்துக்களில் இரட்டைக் கொம்புகளுக்குப் பதிலாக இணைக்கொம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நெடு வினா
1. எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக.
- ஆரம்ப காலத்தில் மனிதன் குகைகளிலும் கல்லிலும் குறியீடுகளாக எழுதினான்.
- இது ஓவிய வடிவமாகவே இருந்தது இதனை ஓவிய எழுத்து என்றனர்.
- பிறகு ஒவ்வொரு எழுத்தையும் குறிக்க ஒவ்வொரு ஒலி பயன்படுத்தப்பட்டது.
- அது ஒலி நிலை எழுத்து எனப்பட்டது.
சிந்தனை வினா
1.தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
- தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
- தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
- பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
- பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.