8th Tamil Basic Quiz 5 Answer key கவிதைப்பேழை - ஓடை

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Tamil Basic Quiz 5 Answer key கவிதைப்பேழை - ஓடை

8th Tamil Basic Quiz 5 Answer key கவிதைப்பேழை - ஓடை. 8th Tamil Basic Quiz 5 கவிதைப்பேழை - ஓடை . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz  Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.

8th Tamil Basic Quiz 5 Answer key கவிதைப்பேழை - ஓடை

8th Tamil Basic Quiz  Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 5 Answer key கவிதைப்பேழை - ஓடை

8th Tamil Basic Quiz 5 ➣ வினாடி வினா 5 ➣ கவிதைப்பேழை - ஓடை

 8th Tamil Quiz 5 Answer Key -வினாடி வினா 5 கவிதைப்பேழை - ஓடை  - 2021-2022 Worksheet 5 ( bridge Course)

1. கீழ்வருவனவற்றுள் வாணிதாசனின் சிறப்புப்பெயர்களில் பொருந்தாததை எழுதுக.

(அ) சிந்துக்குத்தந்தை
இ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
ஆ) பாவலர்மணி
ஈ) கவிஞரேறு

விடை: சிந்துக்குத் தந்தை

2. கீழ்வருவனவற்றுள் எதுகை இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.

(அ) கொஞ்சி - குலவி
இ) நெஞ்சில் -செஞ்சொல்
ஆ) நன்செய் - புன்செய்
ஈ) ஏடு -ஈடு

விடை: கொஞ்சி - குலவி

3. சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க

அ) வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் கவிஞர் என்று புகழப்படுபவர்.
ஆ) தமிழகத்தின் கவிஞர் வாணிதாசன் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.
இ) கவிஞர் வாணிதாசன் என்று புகழப்படுபவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.
ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.

விடை! ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.

4. சேர்த்தெழுதுக.

அ) செம்மை +சொல்-  செஞ்சொல்
ஆ ) நீளுழைப்பு-  நீள் + உழைப்பு

5. சொல்லையும் அதற்கான பொருளையும் பொருத்துக.

விடை

அ) மாதர்   -பெண
ஆ) கவி   --அழகு 
இ) ஈடு  - இணை
ஈ ) ஏடு  - நூல் 

6. கீழ்க்காணும் பாடலடிகளின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டி'

விடை:
நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்வெட்கப்படுமாறு
இடையறாது ஓடி தன் உழைப்பைக் கொடையாகத்தருகிறது.

7. உனக்குத் தெரிந்த நீர்நிலைகளின் பெயர்களை எழுதுக.

விடை:
அருவி, ஓடை, ஏரி, ஆறு, குளம், குட்டை, ஊருணி,கேணி, கிணறு, சுனை, கடல், தடாகம், பொய்கை.

8. பாடலைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

"ஓடை ஆட உள்ளம் தூண்டுதே-கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் (ஓடை ஆட)
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி"
(ஓடை ஆட)

வினாக்கள்:

அ) பாடலடிகள் எதனைப் பற்றி எழுதப்பட்டுள்ளன?

விடை: பாடலடிகள் நீரோடையில் உள்ள நீர்வளத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளன.

ஆ) பாடலில் இடம்பெறும் நிலங்களின் வகைகள் யாவை?

விடை: நன்செய், புன்செய்

இ) எது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குகிறது?

விடை:  நீரோடை

'ஈ )  நன்செய்' - என்னும் சொற்றொடரில் 'செய்' என்பதன் பொருள் என்ன?

விடை: செய் - நிலம், வயல்

9. கட்டத்தில் விடுபட்டுள்ள பாடல் வகை, பாடும் சூழலை நிரப்புக. பாடல்வகை /       பாடும் சூழல்

வள்ளைப்பாட்டு/ நெல்குத்தும்போது பாடுவது.
தாலாட்டு
குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.
ஒப்பாரிப்பாட்டு -  மனிதன் இறந்த பிறகு பாடுவது
ஏற்றப்பாட்டு
நீர் இறைக்கும்போது பாடுவது.
நடவுப்பாட்டு -  நாற்று நடும்போது பாடுவது

10. கீழ்க்காணும் படத்தைப் பார்த்து 'இயற்கை' என்னும் தலைப்பில் நான்கு வரி கவிதை எழுதுக. விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

  • மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கவிதையாக எழுதலாம். மதிப்பெண் வழங்கப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.