Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் உட்பட கல்விநிலையங்களுக்கு விடுமுறை ஆகஸ்ட் 31ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சூழலில், பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில், செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சூழலைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று வெளியான செய்தியால், சூழ்நிலை சரியானதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பள்ளிகள் மூடபட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவடைய உள்ள நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக 10, பிளஸ் 10, மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடக்க வேண்டிய தருணம் இதுதான். இதையடுத்து, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளை செப்டம்பர் மாதம் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக செய்தி பரவியது.
இலவச ஆன்லைன் தேர்வை முழு மதிப்பெண் பெறும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யுமாறு மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.