Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால்
தமிழ் கத்தில் தனியார் பள்ளி களை பொறுத்தவரை யில் 3,600 பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாண வியர் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்ற னர் கொரோனா காரணமாக மேற்கண்ட இரண்டு தேர் வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன ஆனால், இந்த மாண வர்கள் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படை யில் 80 மதிப்பெண்கள், வருகைப் பதிவுக்கு 20 மதிப்பெண்களும் கணக் கிடப்பட்டு தேர்ச்சி அறி விக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய தாக இருக்கிறது. அந்தந்தபள்ளி தலைமை ஆசிரி யர்கள் மூலம் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களை தேர்vuத்துறை கேட்டுப்பெறும் வாய்ப்புள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் நிலை வேறு. முறைகேடு செய்ய வாய்ப்பு அதிகம்.
வேண்டிய மாணவர்களுக்கான மதிப் பெண்களை கூட்டி குறைத்தோ கொடுக்க வாய்ப்புள்ளது. நன்றாக படித்து வரும் மாணவர்கள் வேண்டப்படாதவர்களாக இருந்தால், அந்த மாணவர்களின் மதிப்பெண்கள் குறைத்துக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் 10ம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மேனிலை வகுப்பு செல்லும் போது அவர்கள் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. தனியார் பள்ளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை கவன முடன் பள்ளிக் கல்வித் துறை பெற வேண்டும். இதில் கவனம் செலுத் தாமல் விட்டுவிட்டால் மேற்கண்ட வழிகளில் முறைகேடுகளை செய்ய வாய்ப்பு அளித்தது போல ஆகிவிடும். எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.