Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
6th Tamil Term 1 Lesson 1 Question & Answer - New Syllabus 2025
6th Tamil Term 1 Lesson 1 இன்பத்தமிழ் Book Back Question And Answer.
Class 6 Standard Tamil Term 1 Lesson 1 book back question and answers new syllabus 2025 - 2026. Tamil Nadu Stard board new revised syllabus 2025-26. 6th All subject book back question & answer. class 6 Tamil Term 1, Term 2, Term 3 Q & A.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்
- சமூகம்
- நாடு
- வீடு
- தெரு
விடை : 1. சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்
- மகிழ்ச்சி
- கோபம்
- வருத்தம்
- அசதி
விடை : 4. அசதி
3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________
- நிலயென்று
- நிலவென்று
- நிலவன்று
- நிலவுஎன்று
விடை : 2. நிலவென்று
4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________
- தமிழங்கள்
- தமிழெங்கள்
- தமிழுங்கள்
- தமிழ்எங்கள்
விடை : 2. தமிழெங்கள்
5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
- அமுது + தென்று
- அமுது + என்று
- அமது + ஒன்று
- அமு + தென்று
விடை : 2. அமுது + என்று
6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
- செம்மை + பயிர்
- செம் + பயிர்
- செமை + பயிர்
- செம்பு + பயிர்
விடை : 1. செம்மை + பயிர்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
- விளைவுக்கு - அ. பால்
- அறிவுக்கு - ஆ. வேல்
- இளமைக்கு - இ. நீர்
- புலவர்க்கு - ஈ. தோள்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.
ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக
- பேர் – நேர்
- பால் – வேல்
- ஊர் – நீர்
- வான் – தேன்
- தாேள் – வாள்
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
- பாரதிதாசன் தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர்களை சூட்டியுள்ளார்
2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?
- நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம். காரணம் உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு
சிறுவினா
1. ‘இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.
-
‘தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
-
நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும்
வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.
அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.
சிந்தனை வினா
1. வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்ப டுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக.
- வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
- வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.
- அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
- அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.