Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
2027 ஆம் ஆண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடரும்...
2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
2025-2027 ஆம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து
நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் , எண்ணும் எழுத்தும் சார்ந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் ,
ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு ( 1 முதல் 3 ஆம் வகுப்பு )
தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து
பாடங்களுக்கு ( 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ) முதல் பருவத்திற்கான பாடப்பொருள்
உருவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 2025 2026 ஆம் கல்வியாண்டில் , 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை
கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து
முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியினை 09.06.2025 முதல் 13.06.2025
முடிய நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.