Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. போனஸாக வரும் மதிப்பெண்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தமிழக அரசின் தேர்வுத்துறை சார்பில் மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பணிகளில் சுமாா் 95 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்தநிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட பொதுத்தேர்வில் ‘ஒரு மதிப்பெண் பிரிவில்’ கேட்கப்பட்டதொரு கேள்வியில், மாணவர்கள் பொருளை சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்ததாக புகார் எழுந்தது.
ஒரு மதிப்பெண் பிரிவில் ஜோதிபா ஃபுலே குறித்த ஒரு கேள்வி முரணான வகையில் அமைந்திருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் அந்தக் கேள்விக்கு பதிலளித்திருந்தாலே, அதற்கான ஒரு மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கிட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.