தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தம் அரசு திடீர் உத்தரவு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தம் அரசு திடீர் உத்தரவு.


தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு கடந்த வாரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 10,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 12000 ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தற்காலிக ஆசிரியர் பணி களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களும் இல்லம் தேடி கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை தலைமை ஆசிரியர் மற்றும் அந்தந்த காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப நிரப்பிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கையூட்டு மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீடுகள் இருக்கும் என பல்வேறு தரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.