8th Tamil Basic Quiz 7 Answer key வாழ்வியல் - திருக்குறள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Tamil Basic Quiz 7 Answer key

வாழ்வியல் - திருக்குறள்

8th Tamil Basic Quiz 7 Answer key வாழ்வியல் - திருக்குறள். 8th Tamil Basic Quiz 7 வாழ்வியல் - திருக்குறள் . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz  Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.
8th Tamil Basic Quiz Answer key

8th Tamil Basic Quiz  Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 7 Answer key வாழ்வியல் - திருக்குறள்

8th Tamil Basic Quiz 7 ➣ வினாடி வினா 7 ➣ வாழ்வியல் - திருக்குறள்

 8th Tamil Quiz 7 Answer Key -வினாடி வினா 7 வாழ்வியல் - திருக்குறள்  - 2021-2022 Worksheet 7 ( bridge Course)


1. ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி' என்னும் குறளடியிலுள்ள 'அணி' என்றசொல் உணர்த்தும் பொருளைத் தெரிவுசெய்க.

அ) பொறுப்பு 
ஆ) அழகு 
இ) செயல் 
ஈ) அணிதல்

விடை: அழகு

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) கணை (  கொடிது ) யாழ்கோடு (செவ்விது) ஆங்குஅன்ன
வினைபடு -( பாலால் )  கொளல்.
ஆ) தன்குற்றம்... ( நீக்கிப் ) ... பிறர்குற்றம்... காண்கிற்பின்
என்குற்றம் ஆகும்.--( இறைக்கு )

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது.
(சரி )
ஆ) வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. (சரி) 

4. குறளினைச் சீர்பிரித்து எழுதுக.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
  • விடை- தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்.

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக

அ) தக்கார் - நடுவு நிலைமை உடையவர்
  • விடை- நீதி வழங்கபவர் நடுவுநிலைமை உடையவராக இருக்க வேண்டும்.
ஆ) என்ளற்க - இகழ்தல் கூடாது
  • விடை-  உருவத்தைக் கண்டு யாரையும் இகழ்தல் கூடாது.

6. முறைமாறியுள்ள திருக்குறள் சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

"கால்வல் கடல்ஓடா நெடுந்தேர் கடல்ஓடும்
ஓடாநிலத்து நாவாயும்"
  • விடை- கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் நடா நிலத்து.

7. கீழ்க்காணும் குறளில் மாறி இடம் பெற்றுள்ள மரபுத்தொடர் யாது?

"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்தற்று"
  • விடை-  பசுத்தோல் போர்த்திய புலி.

8. குறளில் பயின்றுவரும் எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

"உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
கார்அனையர்கல்லாதவர்'.
  • விடை- உளர் , களர் - ள -  எதுகை

9. குறளில் பயின்றுவந்துள்ள அணியைப் பொருளுடன் பொருத்தி எழுதுக.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோருக்கு அணி
  • விடை: உவமை அணி
குறளின் பொருள் :  
  • இரு புறமும் சமமாக நிற்கும் தராசைப்போல்ஒரு சார்பாக  நீதி வழங்காமை சான்றோர்க்கு அணியாகும்.
அணிப் பொருத்தம் : 
  • சமன் செய்து சீர்தூக்கும்  கோல் - உவமை
  • ஒரு பால் கோடாமை - உவமேயம
  • போல் - உவமஉருப
  • உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி ஆகும்.

10 ) கதைக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

  • தண்ணீர் சிறிதளவே உள்ள ஒரு குளத்தில் சில தவளைகள் வாழ்ந்துவந்தன.
  • மழை வரும் என்றெண்ணி அவை அங்கேயே இருக்க முடிவுசெய்தன. தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் பெரிய தவளை ஒன்று ஆபத்து வருவதற்குள்  இங்கிருந்து சென்றுவிடலாம் என்று யோசனை கூறியது. 
  • ஆனால் மற்ற தவளைகள் அதைக் கேட்கவில்லை. ஒருநாள் அவ்வழியாக வந்த காளை மாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் சில தவளைகள் நசுங்கி இறந்துபோயின.
விடை
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல்லது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.