10th Tamil Refresher Course Answer key வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10th Tamil 

Refresher Course Answer key 

வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்


10th Tamil Refresher Course Answer key வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல், 10th Tamil  Refresher Course Answer key, 10th Tamil l Refresher Course Answer key, 10th Tamil l Refresher Course Module Answer key, 10th l Refresher Course Day Planer, l0th Refresher Course Module Books 2021-2022. Answer key
10th all subject Refresher Course day  planner

10th Tamil  Refresher Course Answer key 

வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல் 

10th Tamil  Refresher Course Answer key 2. வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1.கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(எ.கா.)ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு.
வினா: அறிவின் வெளிப்பாடு எது?

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா: தமிழகத்தில் எங்கு நடந்த அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன ?

  • அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை ?
  • எந்நாட்டைச் சேர்ந்த மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன ?

2. உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை.

வினா: உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று உள்ளதா ?

3. தமிழக மக்கள்  பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக   மாற்றப்பட்டுள்ளன.

வினா: தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன ?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறுபவர் யார் ?


2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக. 

பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்  கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ    அரும்பாடுபட்டார்;அதற்காகப் பலமுறை சிறை சென்றார்;பலரின்கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.

வினாக்கள்
  1. பெரியாரின் சிந்தனைகள் எப்படிப்பட்டவை ?
  2. தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் யார் ?
  3. பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த கருத்துகள் எவை ?
  4. சமுதாயத்தை மூடப்பழக்கங்களில் இருந்து மீட்க அரும்பாடுபட்டவர் யார்?
  5. பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தப் போராளி என்பதை நிறுவுக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.