Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil TN SCERT Unit 1 Assignment 2021 Full Answer Key
8th Tamil Assignment Answers. 8th Standard TN SCERT Assignment Answers, 8th Tamil Unit 1 TN SCERT Answer key 2021. 8th Standard All Subject TN SCERT Assignment Unit 1 Answers. TN SCERT Announced 1st to 12th All Subject Assignment Worksheets for Unit 1. Students Can Note that 8th Tamil Unit 1 TNSCERT Assignment.
8th Tamil Assignment Answers
8th Tamil TN SCERT Unit 1 Answers
8th Standard Tamil Unit 1 TN SCERT Assignment Answer key.
8th Tamil TN SCERT Unit 1 Answers
ஒப்படைப்பு
- வகுப்பு - 8
- பாடம்: தமிழ்
- இயல்: 1
பகுதி அ
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
இயல்-1
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
1. சிந்துக்குத் தந்தை என்று புகழப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கம்பர்
ஈ) தொல்காப்பியர்
விடை : அ ) பாரதியார்
2. ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே - இவ்வடிகளில் 'நிலப்பகுதி 'என்னும் பொருள் தரும் சொல் யாது?
அ) மணம்
ஆ) இசை
இ) கடல்
(ஈ) வைப்பு
விடை : ஈ ) வைப்பு
3. உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் எவற்றின் சேர்க்கையால் உருவானவை?
அ) வேதிப் பொருள்கள்
ஆ) இயற்கை வளங்கள்
இ) ஐம்பூதங்கள்
ஈ) மனிதர்கள்
விடை : இ ) ஐம்பூதங்கள்
4. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளன?
அ) ஆறு
ஆ) எட்டு
இ) பத்து
ஈ) ஒன்பது
விடை : ஈ ) ஒன்பது
5. எந்த நூற்றாண்டு முதல் நமக்குக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன?
அ) கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
ஆ) கி.பி. ஏழாம் நூற்றாண்டு
இ) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) கி.பி. எட்டாம் நூற்றாண்டு
விடை : அ ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
6. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் யார்?
அ) தந்தை பெரியார்
(ஆ) வீரமாமுனிவர்
இ) தொல்காப்பியர்
ஈ) திருவள்ளுவர்
விடை : ஆ ) வீரமாமுனிவர்
7. தமிழகத்தில் கண்ணெழுத்துக்கள் எழுதப்பட்ட காலம் எது?
அ) முதல் சங்க காலம்
ஆ) இடைச்சங்க காலம்
இ) கடைச்சங்க காலம்
ஈ) சங்கம் மருவிய காலம்
விடை : இ ) கடைச்சங்க காலம்
8. 'ஆமா' என்னும் சொல் எதனைக் குறிக்கும்?
அ) ஆம்
(ஆ) காட்டுப்பசு
இ) ஆந்தை
ஈ) அம்மா
விடை : ஆ ) காட்டுப்பசு
9. தலையை இடமாகக் கொண்ட எழுத்து எது?
அ) உயிர்
ஆ) மெய்
இ) உயிர்மெய்
ஈ) ஆய்தம்
விடை : ஈ ) ஆய்தம்
10. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?
அ) ப், ம்
ஆ) க், ங்
இ) ற், ன்
ஈ) த், ந்
விடை : அ ) ப் , ம்
பகுதி - ஆ
II. குறுவினா.
1. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார்?
பாரதிதாசன் புகழ்ந்த விதம் :
- சிந்துக்குத் தந்தை
- செந்தமிழ்த் தேனீ
- புதிய அறம்பாட வந்த அறிஞன்
- மறம் பாட வந்த மறவன்
2. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? அவை யாவை?
அதிகாரங்கள் மூன்று அவை ,
1 ) எழுத்து
2 ) சொல்
3) பொருள்
3. உயிரளபெடை என்றால் என்ன?
உயிரளபெடை :
உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்.
4. ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு இரண்டு தொடர்கள் எழுதுக.
தோட்டத்தில் ' ஆ ' புல் மேய்ந்தது.
' தீ ' என்றால் நம் மனம் பதறும்.
5. வல்லின மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
6. சிங்கம், புலி, யானை, பசு இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
- சிங்கம் - குருளை
- புலி - பறழ்
- யானை - கன்று
- பசு - கன்று
7. இருதிணை, ஐம்பால் - விரித்தெழுதுக.
இருதிணை - உயர்திணை , அஃறிணை
ஐம்பால்
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
பகுதி - இ
III ) பெருவினா
1 ) எழுத்துகளின் இடப்பிறப்பை விவரி.
எழுத்துகளின் இடப்பிறப்பு :
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
2 ) தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழிகள் யாவை ?
தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழிகள் :
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்பார் தொல்காப்பியர்.
பகுதி - ஈ
IV . செயல்பாடு
படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.
இதழ்
நாக்கு
பல்
மேல்வாய்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.