Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Tamil QUESTION ANSWERS
10ம் வகுப்பு தொகைநிலைத் தொடர்கள் - வினாக்கள் / Kalvi Imayam
10 ம் வகுப்பு கற்கண்டு - தொகைநிலைத் தொடர்கள் - வினாக்கள்
இயல் - 2 ப.எண் : 40
1. சொற்றொடர்( அ) தொடர் என்றால் என்ன ?
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது " சொற்றொடர் " (அ ) "தொடர் " எனப்படும் .
எ.கா : நீர் பருகினான் .
வெண்சங்கு ஊதினான் .
2 . தொகைநிலைத்தொடர் என்றால் என்ன ?
பெயர்ச் சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் இணைந்து வரும் தொடரின் இடையில் ,
வேற்றுமை உருபுகளோ , வினை , பண்பு முதலியவற்றின் உறுப்புகளோ தொக்கி ( மறைந்து) ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகாநிலைத்தொடர் என்று கூறுவர் .
எ.கா ; கரும்பு தின்றான். - இத்தொடரில் ' ஐ ' என்னும் உருபு மறைந்துள்ளது .
3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும் .
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
4. வேற்றுமை தொகை என்றால் என்ன ?
ஒரு தொடரில் வேற்றுமை உறுப்புகள் ( ஐ ,ஆல் ,கு ,இன் ,அது , கண் ) ஏதேனும் ஒன்று மறைந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும் .
எ.கா : மதுரை சென்றார் .
இத்தொடரில் ' கு ' என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து , "மதுரைக்குச் சென்றார் " என பொருள் தருகிறது .
5. உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன ?
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும் .
எ. கா : தேர்ப்பாகன்
இத்தொடர் " தேரை ஓட்டும் பாகன் " என பொருளை உணர்த்துகிறது .
இதில் ' ஐ ' என்ற வேற்றுமை உருளும் ' ஓட்டும் ' என்ற பயனும் மறைந்து வந்துள்ளது .
6. வினைத்தொகை என்றால் என்ன ?
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க ,வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு சொல்லைப் போல நடப்பது " வினைத்தொகை " எனப்படும் . காலம் காத்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும் .
எ.கா : வீசுதென்றல் , கொல்களிறு
7 . வினைத்தொகை எவ்வாறு அமையும் ?
1.வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும் .
2 .முக்காலத்திலும் பொருந்தும்படி பிரிந்து பொருள் தரும் .
வீசுதென்றல் - வீசிய ,வீசுகின்ற , வீசும் .
3 . காலம் காட்டும் இடைநிலைகள் பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன .
8. பண்புத்தொகை என்றால் என்ன ?
நிறம் , வடிவம் , சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தி , பெயர்ச் சொல்லுக்கு இடையில் " மை " என்னும் பண்பு விகுதி மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும் .
எ.கா : இன்மொழி - இனிமையான மொழி
செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்
8 . இருபெயரொட்டு பண்புத்தொகை என்றால் என்ன ?
சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும் .
எ.கா : மார்கழி திங்கள் , சாரைப்பாம்பு
9 . உவமைத்தொகை என்றால் என்ன ?
உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் ) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும் .
பெ.கா : மலர்க்கை ( மலர்போன்ற கை )
10. உம்மைத்தொகை என்றால் என்ன ?
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் " உம் " என்னும் இடைச் சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும் .
எ.கா : அண்ணன் தம்பி , தாய் சேய்
11. உம்மைத்தொகையின் வகைகள் யாவை ?
1. எண்ணல் 2. எடுத்தல் 3 . முகத்தல் 4 நீட்டல் என உம்மைத்தொகை நான்கு வகைப்படும் .
12. அன்மொழித்தொகை என்றால் என்ன ?
வேற்றுமை , வினை , பண்பு , உவமை , உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் , அவை அல்லாத சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும் .
எ.கா : சிவப்புச் சட்டை அணிந்தவர் .
முறுக்கு மீசை உடையவர் .
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.