Today Educational News

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Result

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


ரெட் அலர்ட்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள சூழலில் தமிழக மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலூரில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 1ம் தேதி முதல் படிப்படியாக திறக்க அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.

பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் படிப்படியாக திறக்க அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 3 கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிகளை திறப்பதில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாணியை பின்பற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மாணவர் சேர்க்கை முதல்வர் 10ஆம் தேதி அறிவிப்பார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து முதல்வர் வரும் 10ஆம் தேதி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு எப்போது நடைபெறும். பாடப் புத்தகம், புத்தகப்பை மற்றும் ஷு வழங்குதல் குறித்த அட்டவணையை வரும் 10ஆம் தேதி முதல்வர் அறிவிக்க உள்ளார். தேர்வு எழுதாத நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் 
அண்ணா பல்கலைக் கழகம்.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில், செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி குழுமத்தின் மூலம், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் (முதல் செமஸ்டர் தவிர்த்து), பிஇ, பிடெக் படிப்புகளில்(பகுதி நேரம்) 3, 5, 7 செமஸ்டர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும். கடைசி பணிநாள் அக்டோபர் 26ம் தேதி.

செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ம் தேதி தொடங்கும்

செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9ம் தேதியுடன் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த செமஸ்டருக்கான நாள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும். இளநிலை, முதுநிலை படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.