10ம் தேதி தனியார் பள்ளிகள் சங்கங்கள் பட்டினி போராட்டம் அறிவிப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 


தனியார் பள்ளிகள் சங்கங்கள் 10ம் தேதி பட்டினி போராட்டம் அறிவிப்பு

பட்டினி போராட்டம் அறிவிப்பு
'ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மேல்நிலை , மெட்ரிக்,மற்றும் சி.பி.எஸ்.., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் அறிக்கை:

தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கைநடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள், வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, .பி.எப்., - .எஸ்.., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல்மாலை, 5:00 மணி வரை,
தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர், டிரைவர் என, ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை உணர்த்த, வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில், பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.