'TET' தேர்வுகளின் வினாத் தாள்கள் எளிது: இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

'TET' தேர்வுகளின் வினாத் தாள்கள் எளிது: இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிகரிக்கும் ‘ஆப்சென்ட்'

ஆசிரியர் பணித் தகு​திக்​கான டெட் தேர்​வின் 2 வினாத்​தாள்​களும் எளிமை​யாக இருந்​த​தால் இந்த முறை தேர்ச்சி அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக பட்​ட​தா​ரி​கள் கருத்து தெரி​வித்​தனர்.


இலவச கட்​டாயக்​கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி அனைத்​து​வித பள்​ளி​களி​லும் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் சேர தகு​தித்​தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்​டும். இந்த டெட் தேர்வு மொத்​தம் 2 தாள்​களை கொண்​டது. முதல் தாளில் தேர்ச்சி பெறு​பவர்​கள் இடைநிலை ஆசிரிய​ராக​வும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்​கள் பட்​ட​தாரி ஆசிரிய​ராக​வும் பணிபுரிய​லாம். தமிழகத்​தில் கடந்த 2 ஆண்​டு​களாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.


இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளி​யிட்​டது. இதையடுத்து இணை​ய​வழி​யில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. இதற்​கிடையே பணி​யிலுள்ள ஆசிரியர்​கள் அனை​வருக்​கும், டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த செப்​.1-ம் தேதி உத்​தர​விட்​டது. இதன் காரண​மாக டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​தவர்​கள் எண்​ணிக்கை கணிச​மாக உயர்ந்​தது. அதன்​படி டெட் முதல் தாள் தேர்​வுக்​கு, 1 லட்​சத்து 7,370 பேரும் 2-ம் தாள்தேர்​வுக்கு 3 லட்​சத்து 73,438 பேரும் என மொத்​தம் 4 லட்​சத்து 80,808 பேர் விண்​ணப்​பித்​தனர்.


இவர்​களில் தகு​தி​யானவர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் நவ.3-ம் தேதி வெளி​யானது. தொடர்ந்து நடப்​பாண்​டுக்​கான டெட் தேர்வு நேற்று முன்​தினம் தொடங்​கியது. தொடக்க நாளில் முதல் தாள் தேர்வு நடை​பெற்​றது. இந்​தத் தேர்வை 92,412 (86%) பேர் எழு​தினர். 14,958 பேர் தேர்​வில் கலந்து கொள்​ள​வில்​லை. தொடர்ந்து பட்​ட​தாரி ஆசிரியருக்​கான டெட் 2-ம் தாள்தேர்வு மாநிலம் முழு​வதும் 1,241 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. இந்த தேர்​வில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பட்​ட​தா​ரி​கள் கலந்​து​கொண்​டனர். மையத்​துக்​குள் தேர்​வர்​கள் பலத்த சோதனை​களுக்கு பின்​னரே அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதற்​கிடையே முதல் தாள் போல் 2-ம் தாள் தேர்​வும் எளி​தாக இருந்​த​தாக தேர்​வர்​கள் கருத்து தெரி​வித்​தனர். இதனால் இந்த முறை டெட் தேர்ச்சி பெறு​பவர்​களின் எண்​ணிக்கை உயரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், இவ்​விரு தேர்​வு​களின் முடிவு​களை துரித​மாக வெளி​யிட முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக துறை அதி​காரி​கள்​ தகவல்​ தெரி​வித்​தனர்​.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.