பள்ளி காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு: விடுமுறை நாளை தொடக்கம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

பள்ளி காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு: விடுமுறை நாளை தொடக்கம்

 

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் செப்​டம்​பரில் காலாண்டு தேர்வு நடத்​தப்​படு​கிறது.

இந்த கல்வி ஆண்​டுக்​கான காலாண்டு தேர்வு கடந்த செப். 10-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. இந்த தேர்​வு​கள் இன்​றுடன் (செப். 26) முடிவடைகின்​றன. சில வகுப்​பு​களுக்​கான தேர்​வு​கள் நேற்றே முடிந்​து​விட்​டன. இதையடுத்​து, மாணவர்​களுக்கு காலாண்டு விடு​முறை நாளை (செப்​.27) முதல் அக்​.5-ம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விடு​முறை​யில்​தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்​டாடப்​படு​கின்​றன. இந்த விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​. 6-ம் தேதி திறக்​கப்பட உள்​ளன.


இதற்​கிடையே, காலாண்டு விடு​முறை​யில் ஆசிரியர்​களை பணிக்கு வர வற்​புறுத்​து​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் சிலர் கூறிய​போது, ‘‘காலாண்டு விடு​முறை நாட்​களில் சில குறிப்​பிட்ட வகுப்​பு​களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்​டும் என மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இந்த முடிவை கைவிட்டு காலாண்டு தேர்வு விடு​முறையை முழு​மை​யாக எடுத்​துக் கொள்ள பள்​ளிக்​கல்​வித்​ துறை வழி​செய்​ய வேண்​டும்​’’ என்​றனர்​.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.