10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி, திடீர் மாற்றம்..!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி, திடீர் மாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி, திடீர் மாற்றம்..!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி, திடீர் மாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி, திடீர் மாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படுவதாகவும் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், 19ஆம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ’’10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும். 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும். 

இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ஏப்ரல் 19ஆம் தேதி இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.