தாயின் மணிக்கொடி பாரீர்!!பாடல் வரிகள் தமிழில்!!! ( thayien manikkodi pareer)

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தாயின் மணிக்கொடி பாரீர்!!பாடல் வரிகள் தமிழில்!!! ( thayien manikkodi pareer)


பல்லவி


தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

2.பட்டுத் துகிலென லாமோ?-அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்)

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந்
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்
சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற்
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும்
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர். (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப்
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.