தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – மாவட்ட வாரியாக விபரங்கள் சேகரிப்பு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - மாவட்ட வாரியாக விபரங்கள் சேகரிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் சேகரித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்துவிட்ட நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற வருடம் பொது தேர்வுகள் இல்லாமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறி அந்த தேர்வுகளுக்கான தேதியையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1, நிலை 2, ஆகியோர்களின் விவரங்களையும் ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்தின் இறுதிக்குள் நடக்க உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கான ஆய்வுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பணியாற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள், 9 முதல், பத்தாம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வரை பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர்களின் விவரங்களையும், மாணவர்களுக்கான எண்ணிக்கை விவரங்களையும் கல்வி மாவட்ட அளவில் சேகரிக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.