Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நாளை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, நாளை தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில்,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். நாளை காலை 9.30 மணிக்கு.
செப்டம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் பள்ளிகளை வெவ்வேறு கட்டங்களாகத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அன்லாக் 3-யின் படி பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் இறுதி முதல் ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கானது தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் தற்போது அன்லாக் 3 நடைமுறையில் உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் இந்த அன்லான் 3 உள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. அதில், செப்டம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் பள்ளிகளை வெவ்வேறு கட்டங்களாகத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உண்டான இலவச ஆன்லைன் தேர்வுகள் நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது இவற்றை மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் வரை திரும்ப திரும்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.